அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நவமலையில் அரசு பேருந்தை வழிமறிக்கும் யானை கூட்டம்: வைரல் விடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் நவமலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானை கூட்டம் அரசு பேருந்தை வழிமறிக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகி

News image
Updated On :20 ஜூலை 2022, 5:45 am

DIN

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் நவமலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானை கூட்டம் அரசு பேருந்தை வழிமறிக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிக்கு உள்பட்ட நவமலைக்கு அரசு பேருந்து நாள்தோறும் ஐந்து முறை இயக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், மின்சார ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை காலை பொள்ளாச்சியில் இருந்து நவமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வனப்பகுதியை விட்டு வெளியே சாலையின் குறுக்கே வந்த யானை கூட்டம் வழிமறித்தது. 

இதுதொடர்பாக பயணிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.