அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கட்டட அடித்தளக் குழிக்குள் லாரி கவிழ்ந்து விபத்து: கட்டடத் தொழிலாளி உடல் மீட்பு

குன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணியின்போது சிமென்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளத்தில் இடிபாடுகளில் சிக்கிய கட்டடத் தொழிலாளியின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

News image
கட்டட அடித்தளக் குழிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி
Updated On :20 ஜூலை 2022, 6:08 am

DIN

அவிநாசி: குன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணியின்போது சிமென்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளத்தில் இடிபாடுகளில் சிக்கிய கட்டடத் தொழிலாளியின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோயிலில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில், கோயில் மண்டபம் அமைப்பதற்காக தூண் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குழிக்குள் இறங்கி கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, பெருமாநல்லூரில் இருந்து கான்கிரீட் சிமென்ட் கலவை கொட்ட வந்த லாரி, அஸ்திவாரக் குழியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடீரென குழிக்குள் சரிந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

Story image

அடித்தளக் குழிக்குள் சிமென்ட் கலவையுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி

குழிக்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக மேலே ஏறி உயிர் தப்பினர். இருப்பினும் திங்களூர் பாப்பம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ராமசாமி(42)  லாரியின் அடியில் மண்ணுக்குள் சிக்கியது தெரியவந்தது.

பிறகு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் குன்னத்தூர் போலீசார், தீயணைப்புத்துறையினர் கிரேன், பொக்லைன் இயந்திரங்கள் மூலம், லாரியையும், உள்ளே இடிபாடுகளுக்குள் சிக்கிய ராமசாமியை மீட்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். 

Story image

கட்டட அடித்தளக் குழிக்குள் தலைகீழாக கவிழ்ந்த லாரி

இரவு விடிய, விடிய நடைபெற்ற மீட்புப் பணியையடுத்து, புதன்கிழமை அதிகாலை லாரிக்கு அடியில் மண்ணுக்குள் சிக்கியிருந்த ராமசாமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 

இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் சந்திரன், லாரி ஓட்டுநர் வெங்கடாசலம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.