புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை எந்த மொழியையும் திணிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்றும், புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்துவிட்டு அதைப்பற்றி கருத்து சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.