சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் சந்தித்தனர்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல' என்பது பொன்னையனின் தனிப்பட்ட கருத்து என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
மேலும், அதிமுகவின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.