சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் சாலை வழியாக புதன்கிழமை காலை இளைஞர் ஒருவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென பைக் அதிகமாக வெப்பமாவதை உணர்ந்த அந்த இளைஞர், உடனடியாக பைக்கை சாலையோரமாக நிறுத்திய அடுத்த சிறிது நேரத்திலேயே பைக் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அருகிலிருந்த உணவகத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றார். அங்கு இருந்த பொதுமக்களும் பைக்கில் தண்ணீரை ஊற்றினர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மகன் கைது?