மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 737 பேருக்கு கரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூன் 2022, 12:52 pm

DIN

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 737 பேருக்கு கரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக 737 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை 686 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,951-லிருந்து 4,366 ஆக உயர்ந்துள்ளது. 322 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டங்கள்:

அதிகளவாக சென்னையில் 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 49 பேருக்கும், கன்னியாகுமரியில் 42 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 24 பேருக்கும், கோவையில் 18 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.