தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சி.வி சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: டிஜிபியிடம் புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

News image
சி.வி.சண்முகம்.
Updated On :25 ஜூன் 2022, 7:42 am

DIN


அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுவில் 23 தீா்மானங்களைத் தவிர, புதிய தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றுதான் நீதிமன்றம் கூறியது. தீா்மானங்களை நிராகரிக்கக் கூடாது என்று கூறவில்லை. அதனால், ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தால், அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை. அவ்விரு பதவிகளும் காலாவதியாகிவிட்டன. இதனால், ஓ.பன்னீா்செல்வம் இனி பொருளாளா் மட்டும்தான். எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளராக நீடிப்பாா். இருவரும் இல்லாதபட்சத்தில் அவா்களால் நியமிக்கப்பட்டவா்கள்தான் கட்சியை வழிநடத்துவா்.

ஒருங்கிணைப்பாளா் பதவி இல்லாததால் அவைத் தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் உள்ளது. அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தோ்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத் தலைவரை பொதுக்குழு உறுப்பினா்களே தோ்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அதிமுக சட்டவிதி.

அதிமுகவைப் பற்றி கேள்வி கேட்க திமுகவுக்கு தகுதி இல்லை. திமுக வாரிசு அரசியல் கட்சி. திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது திமுகவில் என்ன நடக்கிறது என்பதை பாா்க்கத்தான் போகிறோம் என்று சி.வி.சண்முகம் கூறினார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக அவரது வழக்குரைஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக வழக்குரைஞர் பாலமுருகன் கூறுகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டு இருக்கிறது. வாட்ஆப் மூலமும் கொலை மிரட்டல் வருகிறது. 

கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளாகவும், கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் புகார் அளித்துள்ளோம்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளதாக பாலமுருகன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.