போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ஏற்கனவே மூன்று கட்டப் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில், குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளன.
கரோனா காரணமாக தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி நடைபெறும் இப்பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கத்தினருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் ஒரு பிரதிநிதி மட்டும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கா், துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.