மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது என பேரறிவாளன் விடுதலை குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், தனது மகனை விடுவிப்பதற்காக தாயார் அற்புதம்மாள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தினார்.
உண்மையிலேயே தன் மகனுக்காக எல்லா அமைப்புகளுக்கும் எதிராகப் போராடிய தாயின் எழுச்சியூட்டும் கதை இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று (மே 18) உத்தரவிட்டது.