நாளை மறுநாள் இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 
நாளை மறுநாள் இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 19-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும். 

இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 19-ம் தேதியன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 21, 22 தேதிகளில் 4 மாவட்டங்களில் மிகக் கனமழையும், நவம்பர் 21ல் 13 மாவட்டங்களிலும், நவம்பர் 22-ல் 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com