வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை இல்லை. அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.