தீபாவளியன்று அதிக பட்டாசு வெடியுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் உள்ளனர். தீபாவளி அன்று தயவுசெய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள். ஒருநாள் பட்டாசு வெடித்தால் பெரிய அளவுக்கு மாசு வராது. இந்தியில் மருத்துவ படிப்பை கொடுக்க எதிர்க்கிறார்கள்.
இதையும் படிக்க- நாகை, காரைக்காலில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்
ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை. தமிழ் வளர்ச்சிக்கு திமுக என்ன செய்தது என்று கேட்டால் பதிலில்லை. திமுகவினர் நடத்தும் எந்தெந்ந பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பதை வரும் 27ஆம் தேதி சொல்வோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ஏன் உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் ராதாகிருஷ்ணன் மீது அரசியல்பார்வை கூடாது, அப்படி செய்தால் யாரும் தைரியமாக பணியாற்ற முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.