திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(அக்.30) மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு
கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை(அக்.30) தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
இதையும் படிக்க: கரோனா எங்கே உருவானது.. இன்னுமா இந்த விவாதம் நடக்கிறது?
மது பானம் விற்பனை, மது பானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மது பானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.