எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:41 am

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

Story image

14 அடி உயரமுள்ள ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்து காட்சி கொடுத்த இடமாகும்.

சனிக் கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடி ஹத்தி தோஷங்கள் நீங்கும். கோடி ஹத்தி பாவ விமோசன தலம் என்பதே மருவி தற்போது கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது.

Story image

புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த ஐந்தாம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. 

தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்களுக்கு பூர்ணாகுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

Story image

இதனை அடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் சிறப்பு மல்லாரி மேளம் முழங்க மங்கள வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்தது.

Story image

தொடர்ந்து பட்டாச்சாரியர்கள் திருமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Story image

இதனை முன்னிட்டு உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ராஜகோபுரம் கருவறை கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

Story image

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்காக டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.