தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அக்டோபரில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி: முதல்வர் தொடக்கி வைக்கிறார்

அக்டோபரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :16 செப்டம்பர் 2022, 9:43 am

DIN

அக்டோபரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்கு பதில் அக்டோபர் முதல் நீட் தேர்வு பயிற்சி தர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. நீட் நுழைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளார்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 35% ஆக சரிந்ததால் முன்கூட்டியே நீட் பயிற்சி அளிக்க  பள்ளிக்கல்வித் துறை  முடிவெடுத்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி ஆலுவலகர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகைசால் பள்ளிகள், காலாண்டுத் தேர்வு மற்றும் நீட் தேர்வுக்கான பயிற்சி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.