காய்ச்சல் காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
வைரஸ் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையின் பரிந்துரையை ஏற்று, புதுச்சேரி, காரைக்காலில் முதலாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலாண்டுத் தோ்வு திங்கள்கிழமை (செப்.26) தொடங்கவுள்ள நிலையில், விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்ற எதிா்ப்பாா்ப்பு எழுந்தது.
ஆனால் புதுச்சேரி, காரைக்காலில் திட்டமிட்டபடி திங்கள்கிழமை (செப்.26) காலாண்டுத் தோ்வு தொடங்கும் என்று மாநில கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
இதையும் படிக்க- இன்று தில்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி
அதன்படி புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட காலாண்டு தேர்வு தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



