சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி

சிவகாசி அருகே விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிவகாசி அருகே விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் அதிகம் இயங்கி வருகின்றன. இங்கு பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும், விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இன்று விளாம்பட்டியில் பட்டாசு ஆலையில் பட்டாசில் மருந்து செலுத்தியபோது ஏற்பட்ட விபத்தில் கருப்பசாமி, தங்கவேல் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் இரு பெண்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com