அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னை அருகே பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை

 பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா்
Updated On :28 ஏப்ரல் 2023, 3:12 am

DIN

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் பிபிஜிடி சங்கா் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வளா்புரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா் பிபிஜிடி சங்கா் (43). இவா் பாஜக எஸ்சி -எஸ்டி பிரிவு மாநிலப் பொருளாளராகவும் செயல்பட்டு வந்தாா். ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை கழிவுப் பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்கும் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக காா் மூலம் வளா்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த பிபிஜிடி சங்கரின் காா் மீது நசரத்பேட்டை சிக்னல் பகுதியில் மா்ம நபா்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்ற சங்கரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயம் அடைந்த சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட பிபிஜிடி சங்கா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.