

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் பாலாலய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பிரதான ராஜகோபுரம் பாலாலயம் நடைபெற்றது. இதில் சிறப்பு ஹோமம், அபிஷேக அலங்கார தீபராதனைகள், நடைபெற்று பாலாலயம் செய்யப்பட்டது.
இதில், உபயதாரர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர், அறங்காவலர் குழு தலைவர் பப்பிஸ் ஏ. சக்திவேல், அறங்காவலர்கள், இந்து அறநிலையத் துறையினர், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.