கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் 3 ஆவது நாளாக யானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.
தேனி மாவட்டம் சுருளி அருவி ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. கடந்த புதன்கிழமை 2 குட்டிகளுடன் 8 யானைகள் அருவியின் அடிவாரப்பகுதியில் கருப்பசாமி கோயில் அருகே முகாமிட்டது. யானைக் கூட்டத்தை கண்காணித்த புலிகள் காப்பகத்தினர் அருவியில் குளிக்கத் தடை விதித்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் அதே யானைக்கூட்டம், அந்த பகுதியிலேயே தொடர்ந்து 3ஆவது நாளாக முகாமிட்டுள்ளது தெரியவந்தது. யானைகூட்டத்தின் நடமாட்டத்தை கண்காணித்த வனத்து றையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க தடையை நீட்டித்துள்ளனர்.