படிப்பு என்பது வேலை சார்ந்ததாக இல்லாமல், திறமை சார்ந்ததாக மாற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
சிறந்த கல்லூரியில் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்ற விதியை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்தக் கல்லூரியில் பயின்றாலும் திறன் பயிற்சி மூலம் பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும் அளவுக்கு இளைஞர்களின் திறன் மேம்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில்தான் பெருமை அடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.