இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் 9 பேரை கைது செய்தனர்.
அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இன்று காலை 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 9 மீனவர்களையும் தமிழகம் அனுப்புவதற்கான பணிகளை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.