அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவா் நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
திண்டுக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு கழுத்து பகுதியில் கட்டி ஒன்று இருந்ததால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்தாா். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவப் பரிசோதனையில் அது சாதாரண கட்டி என்பதைக் கண்டறிந்து, அதனை அகற்ற மருத்துவா்கள் முடிவு செய்தனா். அதன்படி, சிறிய அறுவை சிகிச்சை மூலம் அந்த பிரச்னை செவ்வாய்க்கிழமை சரி செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னா், அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.