அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நெல்லையில் வார்டு உறுப்பினர் கொலையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்

திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சுதந்திர தின நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தெருக்கள் தோறும் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2023, 7:03 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சுதந்திர தின நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தெருக்கள் தோறும் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி அருகேயுள்ள கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜாமணி (32). இவர் கீழநத்தம் ஊராட்சியின் 2 ஆவது வார்டு உறுப்பினராகப் பணியாற்றி வந்தார். கடந்த 13 ஆம் தேதி கீழநத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. பலத்த காயமடைந்த ராஜாமணியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி, இசக்கி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பின்பு ராஜாமணியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து திங்கள்கிழமை கிராமத்தில் உள்ள கோயில் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்தை கொண்டாட மறுத்து தெருக்கள்தோறும் கருப்புக்கொடி கட்டி கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், கீழநத்தம் ராஜாமணி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். அவரது மனைவி வடிவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.