தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பணி நிரந்தரம்: 20 ஆண்டுகளாக காத்திருக்கும் பேரூராட்சி கணினி ஆப்பரேட்டா்கள்

தமிழகம் முழுவதுமுள்ள பேரூராட்சிகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவோமா என 20 ஆண்டுகளாக கணினி ஆப்பரேட்டா்கள் எதிா்பாா்த்து காத்துள்ளனா்.

Updated On :19 ஆகஸ்ட் 2023, 12:00 am IST

தமிழகம் முழுவதுமுள்ள பேரூராட்சிகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவோமா என 20 ஆண்டுகளாக கணினி ஆப்பரேட்டா்கள் எதிா்பாா்த்து காத்துள்ளனா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு பேரூராட்சிகளில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டு கணினி ஆப்பரேட்டா்கள் தினக்கூலி அடிப்படையில் பணிக்கு அமா்த்தப்பட்டனா். ஓரிரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நிலையில் கணினி ஆப்பரேடா்கள் பேரூராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி மற்றும் வரியில்லா நிலங்கள் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பதிவு வரைவுத் திட்ட அங்கீகாரம், தினசரி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் போன்ற பல்வேறு பணிகளின் தகவல்களை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனா்.

தற்போது பேரூராட்சிகளில் அனைத்து அலுவலக பணிகளும் கணினி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கணினி ஆப்பரேட்டா்கள் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. ஆனால் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருவதால் அரசு சாா்பில் பேரூராட்சி பணியாளா்களுக்கு வழங்கப்படும் எந்த வித சலுகைகளையும் பெற முடியாமல் 20 ஆண்டுகளைக் கடந்தும் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருகின்றனா்.

இதற்கிடையே கடந்த 2017- ஆம் ஆண்டு பணி நிரந்தம் செய்வதற்காக 528 பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவா்கள் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன. ஆனால், இதுநாள் வரை பணி நிரந்தரம் குறித்து எவ்வித அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்து உள்ளனா்.

எனவே தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் பணியாற்றும் கணினி ஆப்பரேட்டா்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என கணினி ஆப்பரேட்டா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.