ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேற்று பதாகை, இன்று கட்சி கொடிமரம் அகற்றம்: 2 ஆவது நாளாக விசிக சாலை மறியல் 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இரண்டாவது நாளாக சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுப்பட்டனர். 

News image
கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:31 am

DIN


கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இரண்டாவது நாளாக சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுப்பட்டனர். 

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் தொல். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி வைத்திருந்த பதாகையை நேற்று மா்ம நபா்கள் அகற்றியதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினா் வெள்ளிக்கிழமை மட்டங்கால் பேருந்து நிறுத்தம் முன் பட்டுக்கோட்டை- கந்தா்வகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீசார் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனா். தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  கொடியை ஏற்றி விட்டு சென்று விட்டனர்.  மறியலால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விசிக கட்சி கொடி கம்பத்தை யாரோ எடுத்து சென்று விட்டனர், இதனால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடி கம்பத்தை, பதாகைகளை அகற்றியவர்களை கைது செய்யக்கோரி மீண்டும் அதே பகுதியில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீசார், வட்டாட்சியர் கே.காமராஜ் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராகவி மறியலில் ஈடுப்பட்டுள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.