
விழுப்புரம்: சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வந்த பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி பொன்னாடை அணிவித்து, பழக்கூடை வழங்கி புத்தகங்களை வழங்கினார்.
தங்கள் மகன் திட்ட இயக்குநராக இருந்து செயல்படுத்திய சந்திரயான் -3 விண்கலம் நிலவில் வெற்றிக்கரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் உலகுக்கே இந்தியா பெருமை சேர்த்துள்ளது. அதில் தங்களின் மகனின் பங்கு அளப்பரியது என்று ஆட்சியர் பழனி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.