
நெல்லையில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்த்தில் 29 மாணவர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பயிற்சிக்கு 29 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் தனியார் இன்று மாலை பேருந்தில் சென்றிருக்கின்றனர்.
அப்போது திருநெல்வேலி அரசு தொழிற்பயிற்சி பள்ளி அருகே சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சாலனி (9), மணிகண்டன்(11) உள்பட 29 பள்ளி மாணவர்கள், 5 ஆசிரியர்கள், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








