மதுரை ரயில் நிலையம் அருகே சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.
மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது. தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னெள காவல் துறைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.