புழல் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 4,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், புழல் ஏரியில் இருந்து 4,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில் இருந்து வெளியாகும் உபரி நீரால், செங்குன்றம் சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகள் தீவுப்போல காட்சியளிக்கிறது.
மிக்ஜம் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னை கடற்கரை அருகே உள்ளது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து!
இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வரை மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.