அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பிச்சாட்டூர் அணையிலிருந்து  500 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியர் த.பிரபு சங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:21 pm

DIN

திருவள்ளூர்: மிக்ஜம் புயலால் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து ஆந்திர மாநில பிச்சாட்டூர் அணை நிரம்பியதால் திங்கள்கிழமை ஆரணியாற்றில் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஆட்சியர் த.பிரபு சங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆரணி ஆறு வடிநில கோட்டம் சார்பில் ஆட்சியர் த.பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

ஆந்திரம் மாநிலம் சித்தூர் மண்டலம் பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கம் உள்ளது.இந்த நீர்த்தேக்கத்தில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட அளவு 281 அடியாகும்.அதனால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் 278.10 அடியாக உள்ளது.

இந்த நிலையில் மிக்ஜம் என்ற பெரும் புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டணம் கடற்கரைக்கு இடையில் கடக்க உள்ளது.அதனால் பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.அதனால், நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஆந்திர மாநில அரசு திங்கள்கிழமை 500 கன அடி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.இந்த நீரை ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுக்கள் மற்றும் தடுப்பணைகளில் சேமித்து ஏரிகளுக்கு வரத்துக்கால்வாய் மூலம் அனுப்பி பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு மழை நீர் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே,ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், ஆர்.என்.கண்டிகை, மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்னகாவனம், பொன்னேரி, லட்சுமியாபுரம், கம்மவார்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், பிளயம்பாக்கம், போளாச்சியம்மன்குளம், அனந்தேரி,  பேரிட்டிவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மாளாந்தூர், தொளவேடு, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைபட்டு, பெரியபாளையம், ராளப்பாடி,  ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துரைநல்லூர், வைரவன்குப்பம், வெள்ளோடை, ஆலாடு, கொளத்தூர், மனோபுரம், அத்திமாஞ்சேரி, வேலூர், ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, காட்டூர், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம், தாங்கள்பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அவர் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.