மிக்ஜம் புயலால் சென்னையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!
இதையடுத்து சென்னை காவல்துறை சார்பில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கு மக்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
044-2345 2359, 044-2345 2360, 044-2345 2361, 044-2345 2377 மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டறை எண் 044 -2345 2437 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் நாளையும்(டிச. 7) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.