சென்னையில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட 6 சுரங்கப் பாதைகளில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரங்கராஜபுரம், மாணிக்கம் நகர், கணேசபுரம், கெங்குரெட்டி, வில்லிவாக்கம், வியாசார்பாடி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.