1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (11.12.2023) முதல் தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மிக்ஜம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணியால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13ல் தேர்வுகள் தெடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.