விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசி திருத்தேரோட்டத்தையொட்டி, பிப்ரவரி 24 ஆம் தேதி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசி திருத்தேரோட்டத்தையொட்டி, பிப்ரவரி 24 ஆம் தேதி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. அன்றைய நாளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பின், அத்தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும்.
இந்த உள்ளுர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மார்ச் 4 ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.