அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பர்கூர் அருகே தீயணைப்புத் துறை வீரர்களிடம் பிடிபட்ட மூன்று மலைப் பாம்புகள் 

பர்கூர் அருகே சுமார் 13 நீளமுள்ள 3 மலைப் பாம்புகளை தீயணைப்புத் துறை வீரர்கள் பிடித்தனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 8:53 am

DIN

பர்கூர் அருகே சுமார் 13 நீளமுள்ள 3 மலைப் பாம்புகளை தீயணைப்புத் துறை வீரர்கள் பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மூன்றில் இரண்டு பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு யானை, மான், மயில், எறும்புத்தின்னி,  காட்டுப்பன்றி,  உடும்பு,  சிறுத்தை, மலைப் பாம்பு  காட்டு மாடு,  முயல் போன்ற எண்ணற்ற வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது,  வனப்பகுதியில் இருந்து வெளியேறி , விலை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில்,  பர்கூர் அடுத்த எமக்கல் நத்தம் கிராமத்தில் உள்ள காந்தி நகரில் வசிக்கும் குண ரூபன்  என்பவரின் விளைநிலத்தில் வளர்த்து வந்த நாய்,  கன்றுக்குட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனது.  இந்த நிலையில்,  நேற்று மாலை,  விளைநிலத்தில் மலைப் பாம்பு ஊர்ந்து செல்வதை குண ரூபன் கண்டார்.  மலைப்பாம்பை கண்டு அச்சமடைந்த அவர்,  இதுகுறித்து,  பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

Story image

தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்தனர். நீண்ட நேர தேடலுக்குப் பிறகு,  ஒரு பாதையின் இடுக்கில் மலைப் பாம்பு மறைந்திருப்பதை கண்டனர்.  இதை அடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம்,  அந்தப் பாறையை அகற்றி,  மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர்.

அப்போது,  அந்தப் பாதையின் இடுக்கில் மறைந்திருந்த சுமார் 13 நீளமுள்ள 3 மலைப் பாம்புகள் மறைந்து இருப்பதை கண்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவற்றை   உயிருடன் பிடித்து தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  

ஒரே இடத்தில் மூன்று மலைப் பாம்புகள்,  பிடிபட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள்,  மலைப் பாம்புகளை ஆர்வத்துடன் கண்டு வியர்ந்தனர்.  பிடிபட்ட மலைப் பாம்புகள்,  இன்று காலை,  வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  பிடிபட்ட இந்த மூன்று மலைப் பாம்புகளும்,  வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.