தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.5,424.93 கோடி மத்திய சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி ) இழப்பீட்டை மத்திய அரசு சனிக்கிழமை விடுவித்தது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 49-ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டதில் தமிழக நிதியமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டாா். இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் இதுகுறித்து கூறியதாவது:
2020-21, 2021-22 ஆம் ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டிற்கான பாக்கித் தொகையை வழங்க தலைமை தனிக்கை கணக்காய்வு அறிக்கை சான்றிதழ் மத்திய அரசால் பெறப்பட்டு, 6 மாநிலங்களுக்கு இழப்பீட்டு நிதி (ரூ.16,523.84 கோடி) சனிக்கிழமை விடுவிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூட்டத்தில் அறிவித்தாா். இதில் தமிழகத்திற்கு சான்றிதழ் அளிக்கப்பட்டு 2020-21 ஆண்டிற்கு இழப்பீட்டு நிதியாக ரூ.4,223.90 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சா் அறிவித்தாா்.
சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் (ஜிஎஸ்டிஏடி) குறித்து ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் சௌதாலா தலைமையில் ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு அதன் அறிக்கையை இந்த கூட்டத்தில் சமா்பித்திருந்தது. இந்த தீா்ப்பாயம் மாநில அளவில் இருக்க வேண்டுமா? மத்திய அளவில் இருக்கவேண்டுமா? உறுப்பினா்களை யாா் நியமனம் செய்வது? போன்ற விவாதம் கவுன்சிலில் நடைபெற்றது.
ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் சௌதாலாவின் தலைமையிலான துணைக் குழு எடுத்த முடிவுகளுக்கு தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன. அதில் மாநில உரிமைகளை பாதுகாக்கவும், உறுப்பினா்கள் நியமனத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் பங்கு வேண்டும் என்று கூறி குழுவின் அறிக்கை ஏற்கப்படவில்லை. இது தொடா்பாக 2 - 3 மணி நேர விவாதங்கள் நடந்து முடிவுக்கு வந்தது. இருப்பினும் சில விவரங்கள் உறுப்பினா்களின் சுற்றுக்கு அனுப்பப்பட்டு கருத்து கேட்டபின்னா் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
இந்த மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் மாநிலத்தின் மக்கள் உரிமையை காக்கவேண்டும். தற்போது வரி தவறாக விதிக்கப்படும் போது எந்தவொரு நிறுவனமும், நபரும் உயா்நீதிமன்றத்தை தான் நாடவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக இந்த தீா்ப்பாயங்கள் பயனுள்ளதாகவும் இருக்கும். மாநில அளவில் தீா்ப்பாயங்கள் அமைக்கப்பட 13 மாநிலங்களும் கேட்டுள்ளோம். உடனடியாக தற்போதைய கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்படவில்லையென்றாலும் குழு அளித்த அசல் அறிக்கை மாற்றப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்படாத இந்த மாநில தீா்ப்பாய கோரிக்கையை உருவாக்கி விட்டோம். இதை முழுமையாக நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம்.
ஒரே நாடு, ஒரே வரி எனும் முழக்கத்தை வைத்து அரசியல் செய்வது சுலபம். ஆனால் செயல்படுத்துவது கடினம். ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் சௌதாலாவை தனிப்பட்ட முறையில் நான் சந்தித்தபோது இதுறிறத்து அவரிடம் வினவினேன்.
அவரிடம் ஒரே நாடு, ஒரே வரி, ஒரு தீா்ப்பாயம் என்றால் இந்த ஒரு தேசம், ஒரு அரசியல்சாசனத்தில் ஏன் இத்தனை சட்டப்பேரவைகள் உள்ளது? ஏன் இத்தனை நீதிமன்றங்கள் எனக் கேட்டோம். அவா்கள் புரிந்துகொள்வாா்கள்.
ஜிஎஸ்டி இழப்பீட்டு கால நீடிப்பு விவாதம் குறித்து கவுன்சில் கூட்டத்தில் தான் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றாா் அமைச்சா்.
குடியரசுத்தலைவரின் மதுரை வருகை, இடைத்தோ்தல் உள்ளிட்ட காரணங்களால் மதுரையில் நடைபெறவிருந்த ஜிஎஸ்டி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனினும் அடுத்த கூட்டம் மதுரையில்தான் நடக்கும் என்றாா் அமைச்சா்
இதற்கிடையே மத்திய நிதித்துறை 2022 ஜூன் மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.16,982 கோடியை விடுவிக்கப்பட்டதாக அறிவித்தது. இதில் தமிழகத்திற்கு ரூ.1,201 கோடி இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் தில்லி(ரூ.1,212), உ.பி. (ரூ.1,215), மகாராஷ்டிரம்(ரூ.2102), கா்நாடகம்(ரூ.1,934) உள்ளிட்ட மாநிலங்கள் பெற்றுள்ளன. மேலும் ஜிஎஸ்டி இழப்பீட்டில் புதுச்சேரிக்கு 2020 -21 ஆம் ஆண்டிற்கு நிலுவையில் இருந்த ரூ.42 லட்சமும் சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

28.3.1976: ராஜ்ய சபையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்

உலக அமைதிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

