திருவாரூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நாளை திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின், மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பிப்ரவரி 22ஆம் தேதி பங்கேற்கிறார்.
தொடா்ந்து, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞா் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதல்வர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.