இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த மேகாலயா அரசு!

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்திற்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 6:10 am

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்திற்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

இதனை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 24ஆம் தேதி  மேகாலயாவில் நடைபெறும் இறுதிகட்டப் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். ஷில்லாங் சாலையில் ஊர்வலமாக சென்று மோடி பிரசாரம் செய்தபின், துராவில் உள்ள பிஏ சங்மா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பாஜக திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக சங்மா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் பாஜக மற்றும் பிராந்திய கட்சிகளின் ஆதரவோடு தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ரித்துராஜ் சின்ஹா கூறுகையில், “சங்மா மைதானம் கடந்தாண்டு டிசம்பர் மாதமே முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஆனால், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். மேகாலயாவில் மோடி அலை வீசத் தொடங்கியுள்ளதை அரசியல் கட்சிகள் தெரிந்து கொண்டதால், மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.