பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த மேகாலயா அரசு!

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்திற்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On :

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்திற்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

இதனை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 24ஆம் தேதி  மேகாலயாவில் நடைபெறும் இறுதிகட்டப் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். ஷில்லாங் சாலையில் ஊர்வலமாக சென்று மோடி பிரசாரம் செய்தபின், துராவில் உள்ள பிஏ சங்மா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பாஜக திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக சங்மா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் பாஜக மற்றும் பிராந்திய கட்சிகளின் ஆதரவோடு தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ரித்துராஜ் சின்ஹா கூறுகையில், “சங்மா மைதானம் கடந்தாண்டு டிசம்பர் மாதமே முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஆனால், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். மேகாலயாவில் மோடி அலை வீசத் தொடங்கியுள்ளதை அரசியல் கட்சிகள் தெரிந்து கொண்டதால், மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.