நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தனியார் மருத்துவமனையில்  கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் மர்மமான முறையில்  கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

News image

உயிரிழந்த கல்லூரி மாணவர் கார்த்திக்கேயன்.

Updated On :21 பிப்ரவரி 2023, 9:38 am

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் மர்மமான முறையில்  கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ராஜபாளையம் அருகே பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் கார்த்திக்கேயன் (வயது 19). இவர் ராஜபாளையம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டு ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் குடல் இறக்கம் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென்று, கார்த்திக்கேயன் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை என அவரது உறவினர்கள்  மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர்,  அரை மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கார்த்திக்கேயனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.  ஆனால் அரை மணி நேரத்தில் கார்த்திக்கேயன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் கார்த்திகேயனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக  தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த கல்லூரி மாணவன் சடலத்தை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை முடிவில்  கல்லூரி மாணவன் இறப்பின் மர்மம் தெரியவரும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.