சென்னை: மிகப்பெரிய அளவில் பணம் விளையாடி வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அறப்போர் இயக்கம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஐஏஎஸ் அவர்களை சந்தித்து இன்று புகார் அளித்தது.
அறப்போர் இயக்கம் சார்பில், சத்தியபிரதா சாகுவிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஏராளமான பணம் கொடுக்கப்பட்டிருப்பதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
பணத்தைத் தவிர்த்து, குக்கர், கொலுசு, புடவை என வாக்காளர்களுக்கு, கட்சிகள் தரப்பில் ஏராளமான பரிசுப் பொருள்களும் வாரி வழங்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் கொடுப்பதை விடியோ எடுக்கும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி மக்கள் சுயமாக வேட்பாளரை தேர்வு செய்யும் வகையில் நடைபெறாது. பண சக்திதான் தேர்தலை இயக்கும். எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிலிண்டர் தட்டுப்பாடு! முண்டியடித்து முன்பதிவு செய்ததால் நேர்ந்தது என்ன?

மேற்கு வங்கத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

162 நாள்களில் நிறைவடைந்த மகளே என் மருமகளே தொடர்!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் சரிவு!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

