தில்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தகக் கண்காட்சி இன்று (பிப்.25) தொடங்கியது.
இன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி, மார்ச் 5-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.
பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்தக் குடிமக்களுக்கு கண்காட்சியில் நுழைவு கட்டம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் நாள் என்பதால், ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களைப் பார்வையிட்டனர்.