ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடைமையை செலுத்தி வருகின்றனர்.
238 வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவினரின் புகாரையடுத்து பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.