நெல் அறுவடை இயந்திர வாடகை உயா்வால் விவசாயிகளுக்கு இழப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், இயந்திரத்துக்கான வாடகை உயா்வால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற முன்பட்ட சம்பா அறுவடை பணி.








