மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜார்!

பண விவகாரம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி‌.சம்பத், பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

News image
Updated On :9 ஜனவரி 2023, 6:38 am

DIN

நெய்வேலி: பண விவகாரம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி‌.சம்பத், பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

பண விவகாரம் தொடர்பாக எம்.சி.சம்பத் மற்றும் அவரது உதவியாளர் குமார் இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்தது. 

இந்நிலையில், குமாரின் மாமனார் ராமச்சந்திரன், மாமியார் ஜோதி ஆகியோரை எம்.சி.சம்பத் தூண்டுதல் பெயரில் அவரது சகோதரர் எம்.சி.தங்கமணி உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது தொடர்பாக, பண்ருட்டி போலீசார் ஜன.2 ஆம் தேதி எம்.சி.சம்பத் உள்ளிட்ட 14 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி எம்.சி.சம்பத்தின் வழக்குரைஞர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி எம்.சி.சம்பத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் எம்.சி.சம்பத் நீதிபதி முன்பு திங்கள்கிழமை ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.