தொடர்ந்து, "எங்களது அடுத்தக்கட்ட பணியானது, ஒவ்வொரு இந்திய மொழியிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் மொழிபெயர்க்கப்பட்ட நகல்களை வழங்குவதாகும். நமது குடிமக்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில், அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நீதிமன்ற தீர்ப்புகள் சென்றடையாவிட்டால், நாங்கள் மேற்கொள்ளும் பணியானது 99 சதவீத மக்களை சென்றடையாது. எனவே நான் தொழில்நுட்பத்தை நம்புகிறேன்... நீங்கள் தொழில்நுட்பத்தை பின்பற்றும்போது எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அளவு விமர்சனம் இருக்கும். தொழில்நுட்ப பிளவு உள்ளது. தொழில்நுட்பத்தை அணுக முடியாதவர்களை விட்டுவிட்டோம், ஆனால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எனது நோக்கம் தொழில்நுட்பம் அணுகல் இல்லாதவர்களைச் சென்றடைய வேண்டும், எனவே தொழில்நுட்பத்தின் மூலம் அணுகுவதற்கு மேலும் தடைகளை உருவாக்கக்கூடாது என்று கூறினார்.