குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) முதல் இரு நாள்கள் ‘ட்ரோன்கள்‘ பறக்கவிடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா காமராஜா் சாலையிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஜன.26-ஆம் தேதி 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
சென்னை முழுவதும் 6,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு கருதி ஜன. 25, 26ஆகிய தேதிகளில் சென்னையில் ‘ட்ரோன்கள்‘ பறக்க விடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
நகரின் முக்கிய நுழைவாயில் பகுதிகளான திருவொற்றியூா், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது. ஜன.26-ஆம் தேதி வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.