புகையிலை பொருள்களுக்கான தடை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்
உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு விதித்த தடையை ரத்து செய்துள்ளது.
மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு முழு தடை விதிக்கவில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிகாரத்தை மீறி உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு கமல் ஆதரவு!
மேலும், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...