இதை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, செப்டம்பா் 2-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், தனி நீதிபதி அளித்த தீா்ப்பை ரத்து செய்தது. மேலும், இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தொடரலாம் எனவும் உத்தர்ரவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சண்முகம் என்பவா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக, தலைமைக் கழகம், பொதுக் குழு, செயற்குழு தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.