அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

துறையூர் அருகே கணவன் - மனைவி கொலை

துறையூர் அருகே மர்ம நபர்களால் கணவன் மனைவி கொல்லப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜூலை 2023, 10:54 am

DIN

துறையூர்: துறையூர் அருகே மர்ம நபர்களால் கணவன் மனைவி கொல்லப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனபுரத்தில் வசிப்பவர் தங்கவேலு மகன் ராஜ்குமார்(29). இவரது மனைவி சாரதா (19). இவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய சொந்த ஊர் துறையூர் அருகேயுள்ள பி மேட்டூர் கிராமம்.

திருமணத்திற்கு பின்னர் ராஜ்குமார் சோபனபுரம் விஜயசேகரின் வயலைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதால் கணவனும் மனைவியும் சோபனபுரத்தில் தங்கினராம். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வெளியே கட்டிலில் உறங்கிய  போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலை இருவரும் தலையில் காயங்களுடன் சடலங்களாக கட்டிலில் கிடந்தனர். 

இது தொடர்பாக உப்பிலியபுரம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தகவலறிந்து திருச்சி மாவட்ட காவலர் எஸ்பி சுஜித் குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். 

திருச்சியிலிருந்து தடயவியல் மற்றும் விரல்ரேகை நிபுனர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யாரென காவல் துறையினர்  விசாரித்து வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.